கோபுரங்கள் சாய்வதில்லை - விமர்சனம்

மணிவன்னனில் முதல் படம். கோபுரங்கள் சாய்வதில்லை. பெண்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து படம் எடுத்ததற்காகவே அவரை பாராட்டலாம்.

படத்தோட கதை என்னனா ...

வெற்றியம்பதி கிராமம். வெள்ளந்தி மனிதர்களும் வெகுளிபெண்னும் நிரந்த கிராமம். அங்கே...
"புவனேஷ்வரியக்கா எதுக்கு போடலகாய்க்கு கல் கட்டிவிடறாங்க..?"
"வளையாம நெளியாம நீட்டமா வளரதாண்டி"
"அப்ப நானும் என் சடைக்கு கல் கட்டிவிட்ட அது வளையமா இருக்கும் தானே ..?".

கதாநாயகி அருக்காணி அறிமுகம்.
மஞ்சக்குளி மஞ்சக்குளி மாரியம்மா - அட
பொங்கவெக்க கோவிலுக்கு வாடியம்மா...
அருக்காணி. அந்த கிராமத்தில் உள்ள பொண்டுகளுக்கு ஒரு எடுபிடி. வெகுளி பெண். நிறமோ கருப்பு. வானத்தை பார்க்கும் அவளது சடை. அதில் கலர் கலராய் ரிப்பன். ஊரில் உள்ள சில பெண்கள் இவளுக்கு அமையும் கணவன் அழகாக சும்மா ராஜா போல இருப்பான்னு சொல்ல சொல்ல மனதில் ஒரு வித கற்பனை.

நாயகியின் சடையை, நிலையை பார்த்து அவளது தோழிகள் கிண்டலும் கேலியும் செய்தபடி அருகாணியை ஓட்ட... ராஜா சார் ஒரு பாட்டு போடுங்க...
வாடியம்மா வெளஞ்ச பொண்ணு - அட
வெளஞ்ச கரும்பு கொள்ல
எலி போல எம்புதடி மேல உன்னை எந்த பையன் கட்டிகுவாண்டி..?
பெண் பார்க்க வந்தவர்கள் இவளின் நிலைகண்டு ஓட, தந்தையோ இவளின் நிலைகுலைந்து போகிறார்.

தனது உடைகளை கரையில் வைத்து விட்டு கடலில் வினுசக்ரவர்த்தி குளிக்கும் போது ஒரு திருடன் அதை எடுத்து சொலும்போது ஒருவர் தடுக்கிறார். பிறகு தான் தெரிகிறது அவர் இவரது நண்பர் என்று. நலம் விசாரித்து, பேசி, இருவரும் சம்பந்தியாக முடிவெடுகிறார்கள். அது தெரியாமல்...

ஆபீஸ் நண்பர்களுடன் ரோமியோ போல சுற்றும் நம்ப ஹீரோ முரளி, தனக்கு வரபோகும் மனைவி பற்றி சக நண்பர்களுடன் கூறிவிட்டு வீட்டு வருகிறார். தந்தை திருமண நாளை சொல்ல, ஹீரோ பெண் பற்றி கேட்க, தந்தைக்கு கட்டுப்பட்ட ஹீரோ வேறு வழியில்லாமல் நடக்கிறது அருகானியுடன் திருமணம்.
முதலிரவு. கட்டிலில் முரளி. மனதில் நினைத்த மனைவி கிடைக்காத சோகத்தில். எதிபார்க்காத கணவன் அருகானிக்கு.

அருக்காணியின் செயல்களால் ஹீரோ ரொம்ப நொந்து போக, அந்த நேரத்தில் அவனுக்கு டெல்லியில் சிறந்த விற்பனையாளர் விருது கிடைக்க, வாங்க சொன்ற இடத்தில் ஜூலியை சந்திக்கிறார். பார்த்தும் மனது அவளிடம் பறிபோகிறது (லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடிச்சு ....). சென்னை வருகிறார்.

பெங்களுரு ஆபீஸ் சென்ற ஹீரோவுக்கு ஜுலியின் நட்பு அதிகரித்து. தனது வீட்டிலேயே தங்கி - நட்பு வருகிறது.
புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன்
இதற்காக தானே நான் புடிச்சேன்....
உயர் பதவி கிடைக்கிறது ஹீரோவுக்கு. போக மறுக்கிறார். பிறகு நட்பு - லவ்வாகி - கல்யாணம் செய்துவிடுகிறார். எதுவும் ஜூலிக்கு தெரியாமல் மறைத்து. ஒரு லவ் சாங் வருது இங்கே....
பூ வாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே...
தந்தையின் வற்புறுத்தலால் அருக்காணியை பெங்களுரு அழைத்து வரும்போது - ரயில்வே ஸ்டேஷன் இல் ஜுலி. ஹீரோ, அருக்காணியை விட்டு விட்டு - ஜுலி உடன் வீடு வந்து - மீண்டும் அருக்காணியை தேடி ரயில்வே ஸ்டேஷன் வந்து கிடைக்காமல் - வீடு வந்து பார்த்தல் - அங்கே அருக்காணி.

அருக்காணிக்கு அப்புறம் தான் தெரிகிறது, தனது கணவர் ஜூலியை திருமணம் செய்த்கொண்டுள்ளார் என்று. என்ன செய்ய..? இடிந்து போகிறாள். இந்த விஷயம் தனது தந்தைக்கோ அல்லது மாமனாருக்கு தெரியக்கூடாது என்று முடிவெடுத்து அங்கேயே வேலைகாரியாக....

தன் கண் முன் தனது கணவனை இன்னொரு பெண் சொந்தம் கொண்டாடுவது நினைத்து நினைத்து ...
எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
சொந்தம் தான் என்று தான் நினைத்தேன்
இந்நிலையில் அருக்காணியின் தந்தையும் ஹீரோவின் தந்தையும் இவர்களுது வாழ்க்கையை காண பெங்களூர் வர - படம் விறுவிறுபாகிறது.

ஜூலிக்கு அருகாணியின் கணவன் யாரெண்டு தெரிந்ததா? ஹீரோவின் இரட்டை வேஷம் கலைந்ததா? இப்படி பல கேள்விகள் கேட்டால் நான் சொல்லும் ஒரே பதில் நல்ல DVD-ஆ வாங்கி பாருங்க / TV-ல் இந்த படத்த மறக்காம பாருங்க..

படத்துல எனக்கு பிடித்த சில ..
  • ஜுலியாக ராதா. ரொம்ப அழகா + சிறப்ப நடித்து இரண்டாம் பாதிபடத்த இவர்தான் சுமக்கிறார்.
  • முரளியாக 'மைக்' மோகன். மனுஷன் நவரசத்தையும் காட்டி நடித்துள்ள மிக சிறப்பான படம் இது. அதுவும் அருக்கானியுடன் திருமணம் நடக்கும் இடம். சபாஸ்.
  • அருக்கானியாக சுகாசினி. முதல் பாதியில் கறுத்த தேகத்துடன் வளைந்த சடையுடன் + இரண்டாம் பாதியில் பிரெஷா வந்து ஹீரோ மனசுல இவள்மீது லவ் வரவைக்கும் நடிப்பு.
  • கடைசி நிமிட வசனம். மணிவண்ணன் நிற்கிறார் அங்கே. நல்ல திரைக்கதை. மணிவண்ணன் இயக்குனராக அறிமுகமான படம்.
  • வினுசக்ரவர்த்தியின் கம்பீரமான நடிப்பு கூடுதல் சிறப்பு.
  • இசை. வேறு யாரு நம்ப இளையராஜா தான். பாடல்களை விட பின்னணி இசையில் கலக்கியிருப்பார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும்  சென்றடைய ஒரு வோட்டு மட்டும் எனக்கு போட்ட போதும்.



வேட்டைக்காரன் - பாடல் விமர்சனம்


விஜய் ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி விருந்து படைக்க வருகிறான் வேட்டைக்காரன். இன்று முதன் முதலாக இந்த பட பாடலை கேட்டேன். முதல் முறை கேட்கும்போதே பாடல் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கு பிடிக்கும் இந்த பட பாடல்கள்.

மொத்தம் ஐந்து பாடல்கள். பாடலை எழுதியவர்கள்: கபிலன், விவேகா, அண்ணாமலை. இசை 'நாக்க முக்க' புகழ் விஜய் அன்டனி.

இனி பாட்டுக்கு வருவோம் :

1. நமக்கு பிடித்தவர்களை / கவர்தவர்களை காணும்போதெல்லாம் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதுபோலத்தான், இங்கே, நாயகனும் நாயகியும் தமக்குள் ஏற்படும் உணர்வை வெளிக்காட்டும் விதமாக அமைத்த பாடலோ இது ...? பாட்ட கேட்டும் போதே சும்மா கிர்ருனு இருக்கு. படத்துல பார்த்தா ..(உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்). கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர் பாடிய அந்த பாடலின் வரிகள் :
என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....
கிட்டே நீ வந்தாலே விர்ருங்கிது.... டர்ருங்கிது ...

என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....
கிட்டே நீ வந்தாலே விர்ருங்கிது.... டோர்ருங்கிது...

கை தொடும் தூரம் காய்த்தவளே
சர்கரையலே செஞ்சவளே
எம்பசி தீர்க்க வந்தவளே - சுந்தரியே...

தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்ன சாய்த்தவனே
ராத்திரி தூக்கம் கேடுத்தவனே - சந்திரனே...
2.ஒரு காதல். ஒரு கவிதை. ஒரு காதலி. ஒரு காதலன். இவற்றை கொண்டு எழுதப்பட்ட ஒரு காதல் பாடல். கொஞ்சம் - மெலடி ஜோரு சும்மா சுவைத்து பாரு. கிருஷ், சுசித்ரா பாடிய அந்த பாடலின் வரிகள் :

ஒரு சின்ன தாமரை என் கண்ணை பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே
இதை உண்மை என்பதா ? இல்லை பொய் தான் என்பதா ?
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்கின்றதே.

என் ரோமக்கால்களே ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
என் காட்டு பாதையில் ஒரு ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் - உயிரே
3.ஒரு காதல் பாடல். கேள்வி- பதில் போல வித்தியாசமான பாடல் கம்போசிங். பாடலை கேட்டும் போது படத்தின் இறுதி பகுதியில் இடம் பெறுவது போல இருக்கு. ஒரு குலைவு ஒரு நெளிவு இந்த பாடலில். அருமை. சுர்சித்ரா, சங்கீதா ராஜேஷ்வரன் பாடிய அந்த பாடலின் வரிகள் :
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
குழலிலை குழலிலை தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டையப்போல செவந்திருக்குது உதடு
உதடில்லை உதடில்லை மந்திரித்ததகடு

பருத்தி பூபோல பதியுது உன் பார்வை
பாதமில்லை பாதமில்லை பச்சரிசி சாதம்

வலம்புரி சங்கைப்போல வழுக்குது உன் கழுத்து
கழுத்தில்லை கழுத்தில்லை கண்ணதாசன் எழுத்து
4.கொஞ்சம் ஓவரா தான் இருக்கு இந்த பாடலும். இது எவருக்காக எழுதியதுன்னு தெரியல. மத்தபடி சொல்ல ஒன்னும் இல்ல இதில். கொஞ்சம் தெனாவெட்டா பாடியிருக்காரு நம்ப சங்கர்மகாதேவன், பாடிய அந்த பாடலின் வரிகள் :
நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

நான் புடிச்ச உடும்பு புடி நான் சிரிச்சா வானவெடி
நான் பாடும் பாட்டுக்கு தொல்பறை நீ எடு

நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

வாழு வாழு வாழவிடு
வாழும்போதே வானை தோடு
வம்பை பார்த்தா வாளைஎடு
வணக்கி நின்னா தொலை கொடு

வாழு வாழு வாழவிடு
வாழும்போதே வானை தோடு
வம்பை பார்த்தா வாளைஎடு
வணக்கி நின்னா தொலை கொடு

நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
5.வழக்கமான ஒரு ஓபனிங் சாங்கு. கொஞ்சம் ஓவரா தான் இருக்கு பாடல் வரிகள். இது விஜய்க்கு அரசியல் கனவை சுமத்து வருவது போல இருக்கு. ஒரே கர்ஜனை. ஆனந்து, மகேஷ் வினயக்ரம் இணைத்து பாடிய அந்த பாடலின் வரிகள் :
புலி உரும்புது புலி உரும்புது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது - வேட்டைக்காரன் வர்றதபார்த்து

கொல நடுக்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நடு நடுக்குது நடு நடுக்குது - வேட்டைக்காரன் வர்றதபார்த்து

பட்டாகத்தி பளபளக்க
பாட்டி தொட்டி கலகலக்க
பரந்து வரான் - வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுகாரன்.
நிக்காம ஓடு ஓடு ஓடு .....வரான் பாரு வேட்டைக்காரன்.

மொத்ததுல பாட்டு படு ஜோரு. இனி நீங்களே இந்த படத்தோட பாட்டை கேட்களினாலும் 'சன்' உங்களை கேட்கவைப்பான்.

விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு ஒரு பெரும் விருந்து கார்த்திருக்கு. கடந்த மூன்று படங்களும் சரியாக ஓடாத நிலையில் இந்த படம் நன்கு ஓடவேண்டி உங்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும்  சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



ராத்திரி ராகம் - அலைபாயதே - வைரமுத்து

இரவு. மொட்டைமாடி. தனிமை. தொலைந்து போன நட்சத்திரங்கள். சொல்ல முடியாத சோகத்தில் ஒரு பெண்.

வானம். உடைந்த நிலா. சிறு துண்டு மேகங்கள். தென்னக்கீருகளை வம்புக்கு இழுக்கும் தென்றல். சொல்ல முடியாத சோகத்தில் ஒரு பெண்.

ஒவ்வொரு இரவிலும் ஒரு புல்லாங்குழல் காற்றில் கசிந்து கசிந்து அவள் காதில் விழுகிறது. கண்ணுக்கு தெரியாத அவள் புண்ணுக்கு அது களிம்பு தடவுகிறது. சொல்ல தெரியாத சோகத்தை அது அள்ளிக்கொண்டு போகிறது.

அந்த புல்லங்குழல் கேட்டால், இமை பறவை அடங்கிவிட, மனப்பறவை துடிகிறதே? ஏன்?சொல்லாமல் வரும் விருந்தாளியை போல அவள் கண்ணிலிருந்து ஒரு துளி, அவள் கன்னத்தில் குதிகிறதே? ஏன்?

சோகங்கள் முழுக்க இறக்கிவிடும் அளவுக்கு அத்தனை வார்த்தைகளும் அகலமில்லை. அர்த்தகளின் வரையறைக்கு உட்பட்டது வார்த்தை. அர்த்தங்களின் வரையறைக்கு உட்பாடாததே வாழ்க்கை. எனவே தான் வரையறுக்கப்பட்ட வார்த்தைககளைகொண்டு வரையறுக்க படாத வாழ்க்கையை விளக்குவது சாத்தியமில்லை. இதோ, இந்த கவிதையில் வரும் இவளும் வார்த்தைகளில் கைவிடப்பட்டவள் அல்லது வார்த்தைகளால் கைவிடப்பட்டவள்.

கவிப்பேரரசு வைரமுத்து, தன் பழுத்த வார்த்தைகளில் ஒரு பெண்ணின் ஆத்மா பேசுகிறது. உயிரை தடவும் இந்த குரலில் ஒரு பெண்ணின் இதயம் துடிக்கிறது. புல்லாங்குழல்-க்கும் அவளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்புல்லாங்குழல் பல கண்களால் அழுகிறது. இவள் இரு கண்களால் அழுகிறாள்.

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - நான்
இருட்டில் இருந்து யாசிக்கிறேன்!
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்!

கேட்டு கேட்டு கலங்குகிறேன் - நான்
கேட்பதை அவனோ அறியவில்லை!
காட்டு மூக்கிளின் காதுக்குள்ளே - அவன்
ஊதும் ரகசியம் ப்புரியவில்லை!

இதயம் கணக்கும் இரவுகளில் - அந்த
இங்கீத ராகம் டென்வார்க்கும்!
புதிய ராகத்தில் புல்லெடுத்து - அந்த
புல்லான்குலலே பூபூக்கும்!

கானம் கேட்கும் பொழுதுகளில் - என்
கண்கள் அழுவதை அறியவில்லை!
ஏனோ கண்ணீர் கசிகிறது - இது
எந்த ஜாதியோ தெரியவில்லை!

உறக்கம் இல்ல முன்னிரவில் - என்
உள் மதில் ஒரு மாறுதலாய்!
இறக்கம் இல்லா இரவுகளில் - இது
எவனோ அனுப்பும் ஆறுதலாய் !

ஏகாந்தத்தின் இனிமைலே - என்
இமையே மெல்ல இறங்கிவிடு!
மோக குழலில் ஊறிவரும் - இசை
முடியும் போது உறங்கிவிடும்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - நான்
இருட்டில் இருந்து யாசிக்கிறேன்!
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்!

'அலைபாயதே' என்ற படத்தில் இந்த கவிதையை பாடலாக பதிவு செய்திருப்பார் டைரக்டர் மணிரத்தினம். இதற்கு மிகசிறப்பான முறையில் இசை சேர்த்து நம்மை ரசிக்க வைத்திருப்பார் A.R.ரகுமான். நேரம் கிடைத்தால் இந்த கவிதைகளோடு அந்த பாடலயும் கேட்டு மகிழுங்கள் என்னைபோலவே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



திரும்பிபார்கிறேன் : குங்கும சிமிழ் - விமர்சனம்

நேற்று இரவு, ஆபீஸ் வேலை முடித்து வீட்டு சொல்ல 10:40 ஆச்சு. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு டிக்கெட் வாங்கி போகமுடியலையே என்ற வருத்தத்துடன் பழைய படம் ஏதாவது பார்கலாமே என்று ஒரு DVD போட்டேன். அட நம்ப மைக் மோகன் படம் குங்கும சிமிழ். 175 நாட்கள் ஓடி சாதனை செய்த படம்.

படத்தோட கதை என்னனா ...

கோவை டு சென்னை பஸ்ஸில் நம்ப ஹீரோ ரவி (மோகன்) வேகமாக வந்து ஏறியாவுடன் பஸ் புறப்படுகிறது.அதே பஸ்ஸில் நம்ப கதாநாயகி பிலோமீனா(இளவரசி) - சில ரவுடி பயகளிடமிருந்து தப்பித்து வந்து ஏறுகிறாள். டிக்கெட் எடுக்க காசு இல்லை - ஹீரோ உதவ - பயணத்தின் பாதி வாயில் 'டீ பிரேக்' விட்டு பஸ் நிற்க - ஹீரோவின் பணம் தவறி பஸ்ஸில் விழ - அதை கதாநாயகி தான் திருடிவிட்டார் என சொல்ல - ஒருவழியாக சென்னை லைட் ஹவுஸ் வந்து இருவரையும் இறக்கி விடு செல்லகிறது.

ஹீரோ மீண்டும் பணத்தை கேட்க - நாயகி பணத்தை திருப்பி தருவதாக சொல்லி மாலை பீச் வரசொல்லி செல்கிறார். ஹீரோ கார்த்திருக்க - நாயகி பணத்தை திருப்பி தரும்போது போலீஸ் இருவரையும் கைது செய்து - கோர்ட்டில் நிறுத்த - சாமர்த்தியமாக பேசி இருவரும் விடுதலை ஆகிறார்கள். நாயகி நிலை கண்டு ஹீரோ தங்க இடம் தருகிறார். இந்த இடத்துல ஒரு பாட்டு இருந்தா எப்படி இருக்கும்.

"கூட்சு வண்டியிலே ஒரு காதல் வந்திருக்கு
காதல் செய்வதற்கு இடம் காலியா இருக்கு ...."

இருவரும் வேலைக்கு முயற்சிசெய்ய - LIC-இல் வேலை கிடைத்துவிட்டதாக பொய் சொல்லி ரிக்ஸா ஓட்டும் போது ... ஒரு கனவு பாட்டு இருந்தா எப்படி இருக்கும்.

"கை வலிக்குது கை வலிக்குது மாமா
ஒரு கை பிடிக்கும் அம்மி அரைக்கணும் மாமா ..."

ஒரு நாள் உண்மை தெரியவர, இனி ரிக்சா ஊட்டக்கூடாது என ஹீரோவிடம் பேசி - பசியால் வாடும் இருவரது களைப்பை போக்க ஒரு பாட்டு போடுங்க ராஜா சார்.

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
நினைவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது...."

நிலவு - பசி முகங்கள் - பீச் - காற்று என்ன கேமிரா இரவில் விளையாட .... ராஜா சார் இசையால் நம்மை தூங்க செய்வர் இந்த இடத்தில், பசியை மறந்து.

தன்னால் ஹீரோவும் கஷ்டபடுவதை நினைத்த பிலோமீனா, ஹீரோவிடம் இனி இருவரும் வேலை கிடைத்தால்தான் சந்தித்து பேசணும். அதுவரை நோ ரோமன்சு என்று சொல்லி வேலை தேடி செல்ல - பழைய உறவினரை சந்திக்கிறாள் இவள்.

முன்பணம் கட்டினால் வேலை என்று ஹீரோவுக்கு தெரியவர - பஸ்ஸில் பயணிக்கும் ஒருவர் பணத்தை தவறவிட - அது ஹீரோவிடம் கிடைக்க - அதைக்கொண்டு ஹீரோ வேலைக்கு சேருகிறார். சென்னையை விட்டு ஹீரோ மேட்டுபாளையம் வருகிறார்.

ஹீரோ வந்த இடத்தில் நம்ப ரேவதி வீட்டு வேலைகளை கவனிக்க, ஹீரோ மீது ஒரு வித அன்பு பிறக்க - திருவிழா வர .... ஒரு குத்து பட்டு போடுங்க ராசா சார் இந்த இடத்துல...

"வட்சலாம் நெத்தி போட்டு தன் கையால
மச்சானின் நெஞ்சை தொட்டு ...."

காரு ரேடியேட்டரில் தண்ணீர் இல்லாமல் நின்று விட - நம்ப அடுத்த ஹீரோ சந்திரசேகர் என்ட்ரி. தண்ணீர் தேடி போற இடத்துல ருக்குவை (ரேவதி) பார்க்க - பல்பு எரிகிறது - மணி சப்தம் கேட்கிறது. (நம்புங்க ... அது லவ் தாங்க...)

ஹீரோ பிலோமீனாவின் நினைவில் இருக்க... ஒரு சோகப்பாடல் போட்டு ராசா சார் பின்னியிருபார் பாருங்க .... அட அட நீங்கள் அதை கேளுங்களேன்....

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
நினைவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது ...."

சந்திரசேகர், பெண் கேட்டு வரும்போது - ருக்குவின் தந்தை டெல்லி கணேஷ் பெண் தர மறுக்க - ஒரு பிளாஷ் பேக்கு.

பண பிரச்சனை தான் ருக்கு திருமணம் நிக்கிறது என்ற உண்மை அறிய ஒரு பிளாஷ் பேக்கு. ஹீரோ, ருக்குவை கல்யாணம் செய்ய முன்வர... ஒரு பாட்டு போடுங்க ராஜா சார்...

"பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவள் ...."

பிலோமீனா கதி என்ன ? ருக்குவுக்கும் ரவிக்கும் திருமணம் நடந்துதா ? சந்திரசேகர் காதல் என்னவானது ? இப்படி பல கேள்விகள் கேட்டால் நான் சொல்லும் ஒரே பதில் நல்ல DVD-ஆ வாங்கி பாருங்க / TV-ல் இந்த படத்த போட்ட மறக்காம பாருங்க.

படத்துல .... என்னை கவர்த்தவைகள் பல...
  • ரேவதியும் அவரை சுற்றிவரும் இரண்டாம் பாதி கதையும்.
  • தெளிவான திரைகதை -சுந்தரராஜன். இப்படியெல்லாம் படத்த பார்த்துட்டு இப்ப வர படத்துல கதையை தேட CBI வைக்க வேண்டியுள்ளது.
  • அருமையான 5 பாடல்கள் + பின்னணி இசையும். அதுல பார்ருங்க ... இந்த ராஜா சாரு, மௌத் ஆர்கனை வைத்து ... அட போங்க எல்லாத்தையும் நானே சொல்லிடா...? படத்துல பாருங்க. நீங்களும் என்னைப்போல ரொம்ப என்ஜாய் பண்ணுவீங்க.
  • மோகன் - மிக எதார்த்தமாக நடித்து அனைவரையும் கவர்திருப்பார் இந்த படத்துல.

ஒரு பகவத் கீதையிலோ ...!
ஒரு குர்ரான்லையோ ...!
ஒரு பைபிளிலோ ...!
இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கனும்னும்னா
அதை மாத்த யாராலும் முடியாது!


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



நடைப்பயிற்சி பற்றி - வைரமுத்து

நடைப்பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம் காலைதான். அது ஓசோன் நிறையும் நேரம்; அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம். படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும். காலை நேர நடைப்பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும்.

அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் வீடுவந்து சேர்வதே நடைப்பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள்; தவறு. நடைப்பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல; தூரம். குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி. பூமிக்கு வலிக்குமென்று பொடிநடை போவதெல்லாம் ஒரு நடையா? கைவீசி நடக்க வேண்டும்; காற்று கிழிபடும் ஓசை கேட்க வேண்டும்.

63 தசைகள் இயங்கினால் தான் நீங்கள் நன்றாய் நடந்ததாய் அர்த்தம்.நடைப்பயிற்சியின் போதே லாகவமாய்ச் சுழற்றிக் கழுத்துக்கு ஒரு பயிற்சி தரலாம். தோள்களை மெல்ல மெல்ல உயர்த்திக் காதுகளின் அடிமடல் தொடலாம். விரல்களை விரித்து விரித்துக் குவிக்கலாம். நடைப்பயிற்சியில் பேசாதீர்கள். உங்கள் ஆக்சிஜனை நுரையீரல் மட்டுமே செலவழிக்கட்டும்.

ஒருபோதும் உண்டுவிட்டு நடக்காதீர்கள். சாப்பிட்டவுடன் உடம்பின் ரத்தமெல்லாம் இரைப்பைக்குச் செல்ல வேண்டும்; இரைப்பையின் ரத்தத்தைத் தசைகளுக்கு மடைமாற்றம் செய்யாதீர்கள். உங்கள் விலாச் சரிவுகளில் திரவ எறும்பு போல் ஊர்ந்து வழியட்டும் வேர்வை. அதை இயற்கைக் காற்றில் மட்டுமே உலர விடுங்கள். இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள். எரித்ததற்கு மேல் வழியிலேயே நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள்.

இப்படி... சொன்னது வேற யாருங்க..? நம்ப கவிப்பேரரசு வைரமுத்து தான். அவர் எழுதிய ஒரு கவிதை "உடல் எழுத்து". அதில் மேல் சொன்னது போல மிக அழகாக தனக்கே உரிய கவிதை நடையில் அ முதல் ஃ வரை அவர் எழுதியதை உங்களுடன் ....

உடல் எழுத்து
(அ முதல் ஆஹா வரை..!! )

திகாலை எழு.
காயம் தொழு.
ருதயம் துடிக்க விடு.
ரழுந்த பல் தேய்.
டல் வேர்வை கழி.
ளைச்சதை ஒழி.
ருதுபோல் உழை.
ழைபோல் உண்.
ம்புலன் பேணு.
ழித்துவிடு புகை & மதுவை.
ட்டம் போல் நட.
ஒளதடம் பசி.
தாற்றின் எஃகாவாய்.

நன்றி : முத்தால் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



'இன்விடேசன் ஒன்லி' - பட விமர்சனம்

நேற்று இரவு, வெகு நேரமாகியும் தூக்கம் வரவில்லை. சரி தூக்கம் வரும்வரை எதாவது படம் பார்க்கலாம் என்று ... 'இன்விடேசன் ஒன்லி'(Invitation Only) எடுத்து போட்டு பார்த்தேன். இது தைவான் நாட்டு படம்.

இனி படத்தோட கதைக்கு வருவோம்....

மிக சாதாரண வாழ்க்கை தரத்தில் இருக்கும் ஒருவனுக்கு (வேட் நம்ப ஹீரோ), அவன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய ஆடம்பர வாழ்க்கை ஒரு நாள் அனுபவிக்க கிடைக்கபெறுகிறான், ஒருநாள் தற்செயலாக.

அவன் அந்த இடத்திற்கு போன பிறகு சந்திக்கும் 4 நபர்களும் இவனை போலவே சாதாரண வர்க்கத்தை சேர்ந்தவர்கள்(ரிச்சர்ட், ஹிடோமி, ஹோலி மற்றும் லின்).

உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த மாதிரியான இடங்களுக்கு வரமுடியும். இந்த பேரும் சந்த்தித்து பேசி நண்பரகிறார்கள். இது போன்ற பார்ட்டி இதுவரை இவர்கள் கண்டதுமில்லை அனுபவித்தும் இல்லை. பிரமித்து போகிறார்கள். மது, ஆட்டம், பாட்டம் என களைகட்டுகிறது.

இவர்களை மகிழ்விக்க ப்ரீ கேம்ஸ்-இல் கலந்துகொள்ள, வேட் நிறைய பணம் சம்பதிகிறான். பெராரி காரில் பவனி ... என நினைத்ததெல்லாம் கண்முன்னே நிகழ்கிறது. இந்நிலையில், ரிச்சர்ட் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மற்ற நால்வரும் காண ...பட சூடு பிடிக்கிறது. அதன் பின்னர் ஒவோருவராய் 'அந்த' ஆபத்தில் மாட்டுகிறார்கள். மாட்டிய இவர்களது நிலை என்ன? என்ன ஆகிறார்கள்? என்பதனை கொஞ்சம் ரத்தம், சஸ்பென்ஸ் + கொலைகளுடன் காட்டியிருக்கும் படம் இது.

பாஸை புரியாமல் படம் பார்த்தாலும் படம் நல்ல தான் இருந்தது. ஏதோ என்னால புரிந்துகொண்டவரை படத்த பத்தி சொல்லிடேன். அப்புறம் படத்துல...
  • வேட், நடிப்பு அருமை. அதுவும், தன்னை எதிரியிடம் இருந்து கைப்பற்றி கொள்ள, வெட்டப்பட்ட மனித உடம்பின் மீது படுத்தபடி அந்த சூழ்நிலையை சமாளிக்கும் இடம்... சபாஸ்.
  • ஒளிப்பதிவு - சும்மா புகுந்து விளையாடியிருக்கு.
  • இசை - நம்மை பல இடங்களில் பயமுத்தியுள்ளது. படத்துக்கு மேல் சொன்ன இரண்டு விசயங்களும் பக்க பலம்.
  • சைக்கோ போன்ற மனநிலை பாதிக்க பட்டவர்களின் செயல்கள் நம்மை எதோ செய்கிறது.
  • படத்தில் நடக்கும் சில சித்திரவதைகள் இருதயத்தை ரொம்ப பாதிக்கிறது.
  • நம்ப ஹீரோ, தப்பித்து வெளியே வந்து மீண்டு மாட்டும் இடம்... டைரக்டர் மீண்டும் நம்மை பயமுதுவது போல கதையை அமைத்து ... சபாஸ் பெறுகிறார்.
குறிப்பு : இதயம் பலவீனமாணவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம்.

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். படத்த பத்தின சில தகவல்கள்:

Sales : Filmax, Three Dots Entertainment
Production : Three Dots Entertainment, Warner Bros. Pictures
Cast : Bryant Chang, Julianne, Jerry Huang, Maria Ozawa, Kristian Brodie
Director-editor: Kevin Ko
Screenwriter : Chang Chia-Cheng, Carolyn Lin
Producer : Michelle Yeh
Director of photography : James Yuan
Production designer : Cheng Yi-Feng
Art director : Wang Zi-hsin
Music : Cody Westheimer
Costume designers: Li Jonan, Cheng Yun-Chu
Editor : Henry Wei
Duration : 95 minutes

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



காதல் தோற்றதாய் கதைகள் ஏது?

நானும் 'நாடோடிகள்' படத்த 43-நாள் அன்று தான் முதன் முறையாக பார்த்தேன். படத்த பத்தி நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். நான் ஒன்றும் புதுசா சொல்ல ஒன்னும் இல்லைங்கோ. ஆனா, அந்த படத்துல, கதாநாயகியை முதன் முறையாக காட்டும் போது (டைரக்டர் சசி வீட்டில்) பின்னணி இசையாக ஒரு பாடல் ஒலிக்கும். சசியின் காதல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்தபோது ஒரு பாடல் பின்னணி இசையாக ஒலிக்கும்.

இரண்டு சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் விதமாக இசை அமைப்பாளர் சுந்தர் சி பாபு இசைஅமைத்த அந்த பாடல் வரிகள் மனதை கலங்கடிக்கும். பாடல்வரிகளும் படத்தின் நிகழ்வுகளை சொல்லும் விதமாக எழுதிய பாடல் ஆசிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. ஹரிஹரன் பாடிய அந்த பாடல் ...
....
....
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம் .

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒருபுறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இருகொல்லி எருபானால்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானால்
யார் காரணம் ..? யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தால் கண்ணீராலே
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை

மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாலே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வாசம் விழுந்தானே
நதி வழி போனால் கருவற கூடும் விதி வழி போனானே
விதை ஓன்று போட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
என் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்...

நட்புக்கு மரியாதை செய்யக் காதலுக்குக் கை கொடுத்ததால், நாடோடிகள் ஆகும் நண்பர்களின் கதை!

மேலும் இப்படத்தை பற்றிய விமர்சனங்களுக்கு கீழுள்ள இடுக்கையை பார்க்கவும்.

1.சினிமா விமர்சனம்-நாடோடிகள்

2.நாடோடிகள் - தந்தைகளின் காவியம்!

3.நாடோடிகள் - கலக்கல்; மிஸ் பண்ணாதீங்க.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



கந்தசாமி - விமர்சனம்

கொக் கொக் ....கோ...கொக் ......கக் ......சீ... எனக்கும் இந்த சவுண்ட் ஈசியா ஒட்டிகிச்சு. என்ன பண்ண ..? சில வாரம் ஆச்சு அந்த கொடுமையை மறக்க. என்னதுன்னு கேக்க வரீங்க...? புரியுது... புரியுது... போன சில வாரம் முன்பு, நான் ஒரு படம் பார்க்க போனேன்னு சொன்னேனே ... நினைவிருக்கா? அத பத்தி தான் சொல்ல வந்திருக்கேன்.

இனி கதைக்கு வருவோம்....

திருப்போரூர் முருகன் கோவில் மலை மீது உள்ள மரத்தில் தங்கள் குறையை எழுதிக் கட்டி விட்டால் போதும் சில தினங்களில் அத்தனையும் கிடைத்து விடுகிறது. இந்த செய்தி நாடெங்கும் பரவி மக்கள் கூட்டம் கோவிலில் அலைமோதுகிறது. போலீசார் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். டி.ஐ.ஜி. பிரபு உண்மையை கண்டு பிடிக்க வருகிறார். இது ஒருபுறம்.

நேர்மையான சி.பி.ஐ அதிகாரி ஒருவர், கணக்கில் காட்டாத பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியவர்களிடம் இருந்து எடுத்து கடவுள் கந்தசாமி வாயிலாக குறை என்று வரும் பக்தர்களுக்கு பணத்தை பங்கிட்டு தருகிறார்.

அரசாங்க வங்கியில் ஆயிரம் கோடியைக் கடனாக வாங்கி அதை மோசடி செய்த ஆஷிஸ் வித்யார்த்தி ஒளித்து வைத்திருக்கும் பணத்தைக் கண்டுபிடிக்கிறார். தன் தந்தையின் இந்த நிலைமைக்குக் காரணமான சி.பி.ஐ அதிகாரியான கந்தசாமியைக் பழிவாங்க துடிக்கும் ஸ்ரேயா.

சி.பி.ஐ அதிகாரியிடம் பணத்தை இழந்துவிட்டு பழிவாங்கத் துடிக்கும் வில்லன்கள்!

என்னவாகிறார் கந்தசாமி என்பதுதான் கதை!

பிரம்மாண்டமான செட்கள்... சுத்திச் சுத்தி பறக்கும் ஹெலிகாப்டர்... விதவிதமான கார்கள்... உடைந்து நொறுங்கும் கண்ணாடிகள் என்று ஏகத்துக்கு செலவழித்தவர்கள் ஸ்ரேயா காஸ்டியூமுக்காகவும் கொஞ்சம் ஒதுக்கி இருக்கலாம். பாவம் இந்த அம்மணி, குழந்தையா இருந்தப்ப போட்ட டிரஸ் தான் போட்டுக்கிட்டு வருது.

வடிவேலு ஒருமுறை சிரிக்க வைக்கிறார். வேஸ்ட்.

சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை எல்லாம் காட்சிஆக்கும்போது கோட்டைவிட்டிருக்கிறார்கள். அதிலும் எக்ஸ்யூஸ்மீ கந்தசாமி பாடல் டோட்டல் வேஸ்ட்.

இடைவேளை முடிந்து படம் தொடங்கியதும், விக்ரம் வில்லன்களிடம் உண்மையை சொல்கிறார், அப்பாடா சீக்கிரம் முடிந்து விடும் என்று மனதை தேற்றிக்கொண்டால், மெக்ஸிகோ... புது வில்லன் அலெக்ஸ் என கந்தசாமி மீண்டும் ஆரம்பித்து... போதுமடா (கந்த)சாமி.... தாங்க முடியவில்லை.

விக்ரமின் மிடுக்கான நடிப்பின் மூலம் மினுமினுக்கிறது 'கந்தசாமி' யின் கதாபாத்திரம். விதவிதமான கெட்டப்புகளில் அசத்துகிறார் விக்ரம். அதுவும் சேவலாக வந்து அவர் செய்யும் சேட்டை, சி.பி.ஐ. அதிகாரியாக வரும் கந்தசாமின் கம்பீரமான நடை என அதிலும் தனி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெண் வேடத்தில் சார்லியிடம் ... கொள்ளை அழகு.

ஹாலிவுட் ஸ்டைலை பிரதிபலிக்கும் அதிரடி சண்டை சாகச படம்.

ஆந்திர சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா சி.பி.ஐ. உயர் அதிகாரியாக வந்து விக்ரமுக்கு உதவும் இடத்தில் கைத்தட்டல் பெறுகிறார்.

பக்க வாதம் வந்தது போல நடித்து கடைசியில் பக்க வாதத்திற்கே பலியாகிற ஆசிஷ்வித்யார்த்தியும் அருமை.

மிரட்டியிருக்கிற இன்னொரு சாதனையாளர் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். சபாஸ்.

கந்தசாமி தனி ஆள் இல்லை. அவனுக்குள் ஒரு ஜெண்டில்மேன், ஒரு இந்தியன், ஒரு முதல்வன், ஒரு ரமணா, ஒரு சாமுராய், ஒரு அந்நியன், ஒரு சிவாஜி கலந்த கலவை.

'கந்தசாமி' - ஒருமுறை பார்க்கலாம். கொக்கரக்கோ கும்மாங்கோ ...

குறிப்பு : மூணு வாரமா ஒரே வேலை வேலை வேலை. அதனால கந்தசாமி படத்தோட விமர்சனத்தை உடனே எழுத முடியல.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



வைவேர்ன் (Wyvern) - விமர்சனம்

முதன் முறையாக ஹோலிவூட் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுது உட்கார்ந்தேன். ஏனோ தமிழ் படத்திற்கு விமர்சனம் எழுவது போல ஈஸியா எழுதமுடியல. ஹோலிவூட் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் ஏனைய மூத்த அண்ணன்மார்களுக்கு என் வாழ்த்துகள். என் விமர்சனத்தை படித்துவிட்டு நீங்கள் விமர்சனம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்....

டிராகன் போன்ற பட வரிசையில் இந்த வைவேர்ன் - படமும் ஒரு வகை சயின்ஸ் படம். இயக்கியது ஸ்டீவன் (Steven). வழக்கமா டிராகன்னாவே நெருப்பை கக்கும் மாதிரியான படத்தை பார்த்த நமக்கு (?) இந்த படம் ஒரு வித்தியாசமான படமே. நீங்க வாளுடன் பறக்கும் டிராகன் தான் இந்த வைவேர்ன்.

இனி கதைக்கு வருவோம்....

சூரியன் தலை காட்ட வெட்கப்படும் அலாஸ்காவின் ஒரு சிறு நகரம் பீவர் மில்ஸ் (Beaver Mills). பனி பாறைகள் உடைந்து விழும்போது, அதில் இருந்த டிராகனின் கண்...அப்போது ஆற்றங்கரையில் தூண்டிலில் மீன் பிடித்துகொண்டிருங்கும் ஒருவர் அந்த இடத்தில் எதோ ஒருவித அசம்பாவிதம் நடப்பது போல உணரும் முன்னர்... டிராகன் அவரை சுவாகா செய்துவிடுகிறது. பின்னர் படம் சூடு பிடிக்கிறது.

அதன் பின்னர் அந்த டிராகன் பற்றிய செய்திகள் அந்த நகருக்கு பரவ... டிராகன் பீவர் நகருக்கு அடிக்கடி வந்து நகர மக்களை கொல்கிறது. அதனை எப்படி சாமளித்தார்கள் ? டிராகன் என்ன ஆகிறது ? என்பது தன் கதை.

அலாஸ்காவின் அழகை மிக அழகாக பதிவு செய்திருப்பது அழகு.

படத்தின் இறுதி காட்சிகளை பயங்கர விறுவிறுப்பாக இருக்கு. போலீஸ் ஆபீஸ் ஒருவர் டிராகன்னிடம் மாட்டும் காட்சிகள் அற்புதம்.


  • நிக் சின்ளுந்து(Nick Chinlund) - ஹீரோ. படம் முழுவது இவரது நடிப்பு அருமை. படந்தின் இறுதியில் இவர் அந்த டிராகன்னிடம் இருந்து எஸ்கேப் ஆகும் காட்சியில் பின்னியிருபார் நடிப்பை.
  • பார்ரி கார்பின்(Barry Corbin) - கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு. டிராகனை அழிக்க இவர் செய்யும் முயற்சிகள் அருமை.
  • எரின் கர்ப்லுக் (Erin Karpluk) - படத்தில் அழகான ராட்சசி. இவருன் தம் பங்குக்கு சிறப்பான அழகை காட்டி நடித்துள்ளார்.
  • எலைன் மில்ஸ் (Elaine Miles) - ஒரு பெண் போலீஸ். இவரது உருவமும் அவர் வேளையில் இருக்கும் போது நிறைய சாப்பிடுவிட்டு காரில் தூங்குவது, டிராகன் இவரை கொள்ளும் காட்சிகளில் மிரட்சி.
வைவேர்ன் - மிரட்டவில்லை. சுமார் ரகம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



ஈரம் சொட்ட சொட்ட விமர்சனம்

ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, காதல், வெயில் வரிசையில் இப்பொழுது ஈரம்.

'ஈரம்' பட இயக்குனர் அறிவழகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சிறப்பான படம் பார்த்த திருப்தி எனக்கு. திறமைசாலிகலை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு தரும் டைரக்டர் சங்கர் அவர்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.

இனி கதைக்கு வருவோம்...

ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் மூணு சம்பவங்கள்...

நாயகி சிந்துமேனன் குடியிருக்கும் ஃப்ளாட்டிலிருந்து வழிகிற நீர், அந்த தளத்தை ஈரமாக்கி, பைப் வழிய... வாட்ச்மேன் பார்க்க... ஃப்ளாட்டிர்கு வந்து கதவை தட்டி...உடைத்து உள்ளே சென்று பார்த்தால் ...பிணமாக அவள்.

சிந்துமேனன் குடியிருக்கும் எதிர் ஃப்ளாட்டில் குடியிருக்கும் கல்யாணியம்மா, சமையல் பாத்திரம் கழுவ பைப்பைத் திறக்கிறார்... தண்ணீர் வரவில்லை. மாவு அரைக்க கிரைண்டரைப் போடுகிறார்... மின்சாரம் இல்லை... திடீரென்று தொலைபேசி மணி ஒலிக்கிறது... ஓடி சென்று போனை எடுத்து, பேசிக்கொண்டிருக்கும் போது ... தண்ணீர் கொட்டி... நிரம்பி வழிந்து ...சற்று நேரத்தில்... பிணமாக அவள்.

ஃப்ளாட்டில், வாக்கிங் செல்லும் தியாகராஜன்மேல், திடீரென காற்று வீசி... மழைத்துளி விழுந்தது ... குடையைத் திறக்க.... குடை, அவர் கையை விட்டுப் பறந்து... மீண்டும் ... அவரை நோக்கி.... பிணமாக அவர்.

இந்த சம்பவங்களை விசாரிக்க வரும் நம்ப கதாநாயகன், இந்த கொலைகளை செய்யும் நபரை பிடிக்க... அந்த தியேடர் வந்து.. டாய்லெட்டில் அவனை பயங்கரமா தாக்கி ...பிணமாக அவன். தாக்குவது யாரென்று பார்த்தால்.... ?!

இறுதியில் யார் இத்தனை செய்தது...? காரணம் என்ன ...? தியடரில் சென்று இந்த '?' விடையை காணலாம்.

  • ஆதி - நம்ப ஹீரோ. அசிஸ்டெண்ட் கமிஷனர். நடிப்பில் கலக்குகிறார். இவர் செய்யும் காதல் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கு.
  • சிந்து மேனன் , சரண்யா மோகன் - சரியான பாத்திர படைப்புகள். இருவரும் கண்களிலேயே பல இடங்களில் நடித்துள்ளனர். சபாஸ்! சிந்து மேனன் - சந்தேகத்தின் பேரில் கொல்லப்படும்போது, மனசைப் பதற வைக்கிறார்
  • நந்தா - மனைவியை சந்தேகப்படுற சைக்கோவா நடிச்சிருக்காரு. இரண்டாம் பாதியில் இவர்தான் ஹீரோ.
  • ஸ்ரீநாத் - நந்தாவின் நண்பர். ஒரு விபத்துக்கு பின்னர், வீட்டுக்கு வரும் அவர், அவர் குழந்தை பண்ணும் சேட்டையை பார்த்து ...


  • மனோஜ் - கேமரா. கண்டிப்பா பாராட்டியே தீரனும். என்னமா ஒளிப்பதிவு செய்திருங்காங்க. சபாஸ். ஹோலிவூட் படம் மாதிரி ஒரு நேர்த்தி.
  • இசை - தமன் - படத்துக்கு பெரிய பலமா இருக்கு. பல இடங்களில் சாரலாய் நாமும் நனைகிறோம் தியேடரில்.
  • ஒவொரு காட்சியிலும் எதாவது ஒரு வகைளில் மழை/சாரல்/தண்ணீரையும் சேர்த்து நடிக்க வைத்து...புதுவிதமாக கதையை சொன்ன இயக்குனர் அறிவழகன் பாராட்டுக்குரியவர்.(இத்தனை பார்க்கும் போது சச்சின் படத்தில் வரும் பனி/புகை படர்ந்த இடங்களாக காட்டியது தான் நினைவுக்கு வந்தது)
  • டுயட் இல்லை... ரத்தம் இல்லை... ஆ..வீல்னு... சப்தம் இல்லை... காமடி இல்லை ... ஆனால் படம் ஒவ்வரு நிமிடமும் திகிலுடன்... மிரட்டியிருகார்கள்.
'ஈரம்' - ஒரு சிறப்பான த்ரில்லர் கதை.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



Related Posts with Thumbnails
 
back to top