சூர்யாவின் ஏழாம் அறிவு - விமர்சனம்

'ஈ & தசாவதாரம்' போன்ற படங்களின் வாயிலாக நான் முதன்முதலாக 'பயோ வார்' பற்றிய விசயங்களை கொஞ்சம் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு இப்போ... ஏழாம்அறிவு படத்தில்...

A.R.முருகதாஸ் கடந்தகால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் பயோவாருடன் தொடர்பு படுத்திய விதம், அவரை ஒரு தேர்ந்த தேடல் கொண்ட திரைக்கதையாளராக அடையாளம் காட்டுகிறது.

தமி‌ழனி‌ன்‌ வீ‌ரம்‌‌, மருத்‌துவ‌ம்‌, தற்‌கா‌ப்‌பு‌ கலை‌களை‌யு‌ம்‌ உலகம்‌ வி‌யக்‌கும்‌ வண்‌ணம்‌ நி‌னை‌வு‌ படுத்‌தி‌யதற்‌கா‌க இயக்‌குநரை‌ மனதார பாராட்டலாம்!

சரி சரி படத்தோட கதை என்ன ....

முதல் அரைமணி நேரத்தில் சொல்லப்படும் கதை - fentastic! அது தமிழர் போதிதருமர் பற்றியது...

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவனான பல்லவ மன்னர் குல இளவரசன் போதிதர்மனை அவனது ராஜமாதா சீனாவுக்குப் போகும்படி கட்டளையிடுகிறார். மூன்றாண்டு தரைவழிப் பயணமாக இமயத்தைக் கடந்து சீன கிராமம் ஒன்றில் கால் பதிக்கும் போதி தர்மனை, சீனர்கள் ஒரு ஆபத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஆபத்து 'கொள்ளை நோய்' உருவில் அந்த கிராமத்தைத் தாக்க, நோய் பாதிக்கப்பட்ட முதல் குழந்தையை உயிரோடு துணியில் சுருட்டி காட்டில் தூக்கிப் போட, அந்த குழந்தையை போதிதர்மன் தன் மருத்துவத் திறமையாமல் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறார். அப்போதுதான் போதி தர்மனின் மகத்துவம் அவர்களுக்குப் புரிகிறது. அந்தக் கிராமம் முழுவதுமே அப்போது நோயில் வீழ, போதிதர்மன் அந்த மக்களை நோயிலிருந்து மீட்கிறார். சீனாவின் பிற பகுதி மக்களுக்கும் அந்த நோய் சிகிச்சை முறைகளை கற்பிக்கிறார். கொள்ளை நோயே இல்லாமல் போகிறது.

அடுத்த சில நாட்களில் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்த கிராமத்தைத் தாக்க, அதிலிருந்து அந்த மக்களை தனது அரிய தற்காப்புக் கலை மூலம் காப்பாற்றுகிறார் போதிதர்மன். அந்த கலையை தங்களுக்கும் கற்பித்துத் தரச் சொல்லி சீனர்கள் கேட்க, அவர்கள் அனைவருக்கும் களறிப் பயட்டு, நோக்கு வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தருகிறார்.

சீனர்களுக்கு செய்த சேவையில் திருப்தியுற்ற போதிதர்மன் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்கிறார். ஆனால் அந்த சீனர்களோ, போதி இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்பாகவும் அச்சமின்றியும் இருக்கும் என நம்புகிறார்கள். எனவே போதிக்கு விஷம் கலந்த உணவைக் கொடுக்க, அது விஷ உணவு எனத் தெரிந்தும், அவர்களுக்காக உண்டு இறந்து சீனாவுக்கு உரமாகிறார் போதிதர்மன்.


மீதி கதை என்னாபா... ?

நிகழ்காலத்தில் சென்னையில் ... என மீதி படம் தொடர்கிறது....

தமி‌ழ்‌ நா‌ட்‌டி‌ல்‌ ஆரா‌ய்‌ச்‌சியி‌ல்‌ ஈடுபடும்‌‌ மா‌ணவி‌ சுபா‌, போ‌தி‌தர்‌மனி‌ன்‌ வரலா‌ற்‌றை‌ ஆரா‌ய்‌ந்‌து வி‌யக்‌கி‌றா‌ர்‌. அவன்‌ வா‌ழ்‌ந்‌த பகுதி‌யி‌ல்‌ செ‌ன்‌று அவனது வம்‌சா‌வழி‌‌ ரத்தத்தை சோ‌தி‌த்‌து அதே‌ மரபனு உள்‌ள ஒரு இளை‌ஞனை‌ கண்‌டு பி‌டி‌க்‌கி‌றா‌ள்‌. அவர் தான் சர்க்கஸ் கலைஞர் சூர்யா. அவனை‌ கா‌தலி‌ப்‌பது போ‌ல நடி‌த்‌து, அவனது ஆரா‌ய்‌ச்‌சி‌க்‌கு பயன்‌ படுத்‌த முயற்‌சி‌க்‌கி‌றாள்‌‌.

இந்‌தி‌ய நா‌ட்‌டி‌ல்‌ கொ‌டி‌ய வி‌யா‌தி‌யை‌ உருவா‌க்‌கி‌, அதற்‌கு மருந்‌து தே‌டி‌ தன்‌ நா‌ட்‌டி‌டம்‌ கை‌யே‌ந்‌த வை‌க்‌கவு‌ம்‌, அதன்‌ மூ‌லம்‌ இந்‌தி‌யா‌வை‌ அடி‌மை‌யா‌க்‌க நி‌னை‌க்‌கும்‌ சீ‌னா‌, போ‌தி‌தர்‌மன்‌ பற்‌றி‌ய DNA ஆரா‌ய்‌ச்‌சி‌ செ‌ய்‌யு‌ம்‌ மா‌ணவி‌யை‌(சுருதி) ஒழி‌த்‌து கட்‌டவு‌ம்‌‌, எல்‌லா‌ தி‌றமை‌யை‌யு‌ம்‌ கொ‌ண்‌ட ஒரு இளை‌ஞனை‌(Johnny Tri Nguyen) இந்‌தி‌யா‌வு‌க்‌கு அனுப்‌பு‌கி‌றது.

இதனிடையில் காதலில் விழும் ஹீரோவுக்கு அவனில் தேடல் பற்றிய விஷயம் தெரியவர... இவர்களை அழிக்க வில்லன் சென்னை வருகிறான். வில்லன், சுருதியை கொன்றானா? அவன் போட்ட திட்டம் நிறைவேறியதா? நம்ப ஹீரோ காதல் என்னவானது? என்பதை தியேடரில் மட்டும் சென்று பாருங்க.


எனக்கு பிடித்த சில....

போதிதர்மன் & சர்க்கஸ் கலைஞர் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார் சூ‌ர்‌யா‌. போ‌தி‌தர்‌மனா‌க அறி‌முகமா‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌ வி‌யக்‌க வை‌க்‌கி‌றா‌ர் சூ‌ர்‌யா‌. முறுக்‌கே‌றி‌ய உடம்‌பு‌, மி‌ரள வை‌க்‌கும்‌ பா‌ர்‌வை‌, பதறவை‌க்‌கும்‌ சண்டை என அபா‌ரமா‌ன தி‌றமை‌களை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ அந்‌தப்‌‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு வலி‌மை‌ சே‌ர்‌க்‌கி‌றா‌ர்‌.

அதே‌ போ‌ல சர்‌கஸ்‌ கலை‌ஞனா‌க ஆடி‌ப்‌பா‌டி‌, கா‌தல்‌ கொ‌ண்‌டு... வி‌ளை‌யா‌ட்‌டு பி‌ள்‌ளை‌யா‌கவு‌ம்‌ கலக்‌குகி‌றா‌ர்‌. பி‌றகு வி‌ல்‌லனை‌ கண்‌டு அதி‌ர்‌ந்‌து, அவனை‌ கண்‌டு ஓடும்‌ போ‌து சரா‌சரி‌ இளை‌ஞனா‌க பளி‌ச்‌சி‌டுகி‌றா‌ர்‌. 'தி‌ருப்‌பி‌ அடி‌ப்‌பே‌ன்‌' என்‌று உரக்‌க பே‌சுகி‌ற போ‌து உரமே‌ற்‌றுகி‌றா‌ர்‌.‌ சண்‌டை‌க்‌ககாட்‌சி‌யி‌லும்‌, நடனத்‌தி‌லும்‌ அவரை‌ அடி‌ச்‌சுக்‌க முடி‌யா‌து என்‌கி‌ற அளவு‌க்‌கு அவரது தி‌றமை‌ பளி‌ச்‌சி‌டுகி‌றது. Well done & good Job Surya!!!

ஆரா‌ய்‌ச்‌சி‌ மா‌ணவி‌ சுபா‌வா‌க அறிமுக நாயகியாக ஸ்ருதி கமல்ஹாசன்... தமிழில்தான் இது இவருக்கு முதல் படம். எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று..! அதனை உணர்த்துவது போல் அழகான அளவான நடிப்பு. கமல்ஹாசன் நிச்சயம் பெருமைபட்டு கொள்ளலாம். குளோஸப் காட்சிகளில் வாய்ஸ் மாடுலேஷன் சிறிதளவுகூட மாறாமல், சிந்தாமல், சிதறாமல் இருக்கிறது. Welcome Shuruthi!

வில்லன் நடிகரான அந்த டோங் லீ. நல்ல தேர்வுதான். அடே‌ங்‌கப்‌பா‌... அதி‌ரடி‌ மி‌ரட்‌டல்‌!
ஆனால், அவர் அளவுக்கு சூர்யாவுக்கு குங்பூ தெரியாத்தால் ஹீரோவுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறார். Good opening as Villan!!!

ஒபனிக் சாங் + யம்மா யம்மா பாடல் படு அபத்தம். பின்னணி இசை பரவாயில்லை. ஹாரிஸ் கைதட்டல் வாங்கும் இடம் முதல் அரை மணி நேரத்தில் தான். பிறகு கிளைமாக்ஸ் பாடலில்.
எனக்கு பிடித்த வசனம்...
ஏய் எதுக்கு குப்பைத்தொட்டியை தேடற ...?

ஒரு மனுசனைப் பற்றி நல்ல விஷயம் தெரியனுன அவன் படிக்கிற புக்கை பாரு.... கேட்ட விஷயம் தெரியனுனா அவன் வீட்டு குப்பைத் தொட்டியை பாரு.....

எனக்கு அவன் மேல லவ் எல்லாம் இல்ல.... ஆனா அவன் கூட இருந்தா ஒரு சந்தோசம்... தைரியம் எல்லாம் கிடைக்குது.

வீரம் வீரம்னு சொல்லி நாம் இலங்கை சண்டையில தோத்துத்தானே போனோம்.?

அது துரோகம்.... வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரியாம வாழ்த்திட்டு இருக்கோம். ஈழத்துல நாம தோத்ததர்க்கு துரோகம் தான் காரணம்.
சபாஸ் டைரக்டர்

இப்படத்துகாக A.Rமுருகதாஸ் கடுமையாக உழைத்திருக்கிறார்... பல்வேறு இடங்களில் ஏராளமான தகவல்களை திரட்டியிருக்கிறார்... அவை எல்லாவற்றையும் வீணாக்காமல் செய்திருக்கிறார். அதில் ஓன்று ...
1. யானை மீது ஏறி வரும் ஹீரோ நம்ப ஹீரோயினிக்கு லிப்ட் தருவது புதுமை.

2. நாயிடமிருந்து எவ்வாறு மனிதர்களுக்கு ​நோய் பரவுகிறது... ஒரு மனிதரிடமிருந்து இன்​னொரு மனிதருக்கு எவ்வாறு ​நோய் பரவுகிறது என ​நோய் பரவுவது குறித்த காட்சிப்படுத்தல்கள் குழந்​தைகளுக்கும் புரிய​வைக்கும் விதத்தில் நன்கு படமாக்கப்பட்டிருப்பது நல்ல முயற்சி.
சண்டைக்காட்சிகள்

பீட்டர் ஹெயினின் சண்டைக்காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.மிக விளக்கமாகவும் விவரணையோடும் பல விஷயங்களைச் சொல்லியிருந்தாலும் சில சில இடங்களிள் ஏன்... எதற்கு... எப்படி..? என்ற கேள்வி எழுகின்றது.

வில்லனாக வரும் டோங் லீ நடிகர் யப்பா....?! சண்டை காட்சிகளில் அப்படி ஒரு ஆக்ரோஷம். சண்டை கட்சிகள் உயிரோட்டமாக அமைந்ததற்கு இவருடைய பங்களிப்பு ஒரு முக்கியகாரணம். Congratz!!!

ரவி K.சந்திரனின் ஒளிப்பதிவைப் பற்றி நிறைய பேசலாம். பிரம்மாண்டம் என்பதை உணரவைக்கும் நேர்த்தி. சில இடங்களில் அது மிஸ்ஸிங் ...

படத்துல குறை இல்லையா...?

ஏன் இல்லை.... நிறைய இருக்கு. நீங்கள் சொல்லுங்க ...குறை இல்லாத மனுஷன் இந்த உலகத்துல இருக்கானா ..?!


மிக நல்ல தொடக்கத்திற்கு பாதை அமைத்து, தமிழரின் கலை, பண்பாடு குறித்த வாழ்வியலை வடித்திருக்கும் இயக்குனர் A.R.முருகதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில்... அனைத்து தமிழ் மக்களும் பார்த்து பரவசம் அடைய வேண்டிய ஒரு அருமையான படம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



1 comments:

Unknown said...

இன்னும் கொஞ்சம் விரிவாக போட்டிருக்கலாமே

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top