சுடச்சுட இட்லி மஞ்சூரியன் !

தமிழர்களின் அற்புதமான உணவு இட்லி. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.

இட்லி மீந்தால் உப்புமா கிண்டவோ, வேறு என்ன செய்யலாம் என்றோ யோசிக்க வேண்டாம். இட்லியை கொண்டு செய்யப்படும் ஒரு உணவு தான் இட்லி மஞ்சூரியன். வாங்க சுடச்சுட இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:-

  • இட்லி - 6
  • மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
  • கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
  • கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்

  • இஞ்சி - 1 துண்டு
  • பச்சை மிளகாய் - 5
  • பூண்டு - 5 பல்
  • முந்திரி - 10

  • டொமேட்டொசாஸ் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:-

  • இட்லியை விரல் நீளத் துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.

  • ஒரு பேசினில் மைதா மாவு, கார்ன் ப்ளவர், கடலை மாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளவும்.

  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து மாவில் சேர்க்கவும்.

  • டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இட்லித்துண்ட்களை கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

  • சுடச்சுட இட்லி மஞ்சூரியன் தயார்.

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவியும் பரிமாறலாம். இட்லியை பொரிக்காது வதக்கியும் போடலாம்.
இட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.
Thanks : Image from en-iniyaillam.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



2 comments:

Unknown said...

இட்லி மஞ்சூரியன் ..ஆஹா..பேஷ்.பார்த்தாலே நல்லா இருக்கே!

பொன் மாலை பொழுது said...

கோழிப்பையன் இனிமேல் இட்லி பையன் சரியா....:))

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top